சிபிஐ ஆர்டிஐ சட்டத்திலிருந்து விலக்கு அளித்தது ஏன்?- மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Subscribe to Oneindia Tamil

Chennai High Court
சென்னை: ஆர்டிஐ வரம்பிலிருந்து சிபிஐக்கு விலக்கு அளிக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் மாநிலங்களுக்கிடையிலான பல முக்கிய வழக்குகளை விசாரித்து வருவதால் ஆர்டிஐ வளையத்தில் சிபிஐயை சேர்க்காமல் விலக்கு அளிக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை கடந்த சனிக்கிழமையன்று பரிசீலித்த மத்திய அமைச்சரவை, ஆர்டிஐ வளையத்திலிருந்து சிபிஐக்கு விலக்கு அளிக்க சம்மதித்தது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், ஆர்டிஐ வளையத்திலிருந்து சிபிஐயை விலக்கி வைக்க முடிவெடுத்தற்கு என்ன காரணம். சிபிஐக்கு ஏன் விலக்கு அளிக்க வேண்டும் என்பதை விளக்குமாறு கூறி மத்திய அரசுக்கும், சிபிஐக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

3 வாரங்களுக்குள் இந்த விளக்கத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுக்கு சமூக சேவகர்கள் உள்ளிட்டோர் கடும் அதிருப்தியம், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+