அடுத்த 10 நாட்களுக்கு சென்னையில் தினமும் 2 மணிநேரம் மின்வெட்டு
சென்னை: அடுத்த 10 தினங்களுக்கு சென்னையில் தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்திற்குள்ளாகவே, தமிழகத்தில் மின் நிலைமையைச் சீரமைக்கும் பல பணிகளை மேற்கொண்டு, தமிழகத்தை மின்வெட்டிலிருந்து விடுவித்து வருகிறார்.
தமிழகத்தின் எதிர்கால மின் தேவையை கருத்தில் கொண்டு, வடசென்னையில் வள்ளூர் கிராமத்தில் 2500 மெகாவாட் மின்திறன் கொண்ட அனல் மின் நிலையம் நிறுவுவதற்காக, தேசிய அனல் மின் கழகத்துடன் ஒப்பந்தம் ஒன்றை முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு 12.7.2002 அன்று ஏற்படுத்திக் கொண்டது.
பின்னர், இதன் திறன் 3500 மெகாவாட்டாக உயர்த்தப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்ற பின் இந்த அனல் மின் நிலையப் பணிகளை விரைவாக முடிக்க ஆணையிட்டார். அதன் பேரில் இந்த அனல் மின் நிலையத்தின் முதல் அலகு இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மின் உற்பத்தியினை துவங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த மின் நிலையத்தின் துவக்கப் பணிகளுக்கான மின் தேவைக்காகவும், மின் உற்பத்தி துவங்கிய பின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தினை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்வதற்காகவும் 400 கி.வோ. மின்பாதை தேசிய மின் கட்டமைப்பு கழகம் மூலமாக அமைக்கப் படுகிறது.
இந்த மின்பாதை நெல்லூரிலிருந்து அலமாதி வழியாக ஸ்ரீபெரும்புதூர் செல்லும் 400 கி.வோ. இருவழிப் பாதையில் இணைக்கப்பட வேண்டும்.இந்தப் பணி நடைபெற்ற பின்னரே, இந்த அனல்மின் நிலையத்தில் மற்ற பணிகளை மேற்கொள்ள இயலும். இந்தப் பணி முடிவடைய 10 நாட்கள் ஆகும்.
இந்தப் பணி நடைபெறும் போது நெல்லூர் வழியாக பெறப்படும் 1000 மெகாவாட் மின்சாரம் தடைபடுவதால் சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 21.6.2011 முதல் 30.6.2011 வரை நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு மணி நேரம் சுழற்சி முறையில் மின் தடை நடைமுறைப்படுத்த மின்சார வாரியம் முடிவெடுத்தது.
ஏற்கனவே, நிலவி வரும் ஒரு மணி நேர மின் தடையுடன், மேலும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு என்பது மக்களை மிகவும் பாதிக்கும் என்பதால், முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதனைக் குறைக்கும் வழிமுறைகளை ஆராய்வதற்காக 24.6.2011 அன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மின் வெட்டின் தாக்கத்தை குறைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டன. முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுரைப்படி, நெல்லூர்-அலமாதி- ஸ்ரீபெரும்புதூர் இருவழி மின் தடத்திலுள்ள (400 கே.வி.) ஒரு தடத்தில் இடைக்கால இணைப்பு ஏற்படுத்த மின்சார வாரியம் முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம் பெரும்பகுதியான மின்சாரம் சென்னைக்கு தொடர்ந்து கிடைக்குமென்று கண்டறியப்பட்டது. இதனால் சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் மின்பற்றாக்குறை 250 மெகாவாட் அளவிற்கு குறைக்க இயலும் என கண்டறியப்பட்டது.
இதன் அடிப்படையில் தற்போது நிலவி வரும் ஒரு மணி நேர மின் தடையுடன் 27.6.2011 முதல் 7.7.2011 வரை, 10 நாட்களுக்கு மட்டும், கூடுதலாக பகலில் ஒரு மணி நேரமும், 28.6.2011 மற்றும் 6.7.2011 ஆகிய 2 நாட்களில் மட்டும் இரவில் ஒரு மணி நேரமும் சுழற்சி முறையில் மின்நிறுத்தம் செய்யப்பட திட்டமிடப்படுள்ளது.
பகல் நேரங்களில் மின் தடை செய்யப்பட்ட இடங்களில் இரவு நேரங்களில் மின்தடைசெய்யப்பட மாட்டாது. ஒரே இடம் இரண்டு முறை இரவு நேரங்களில் பாதிக்கப்படாது. (28.6.2011, 6.7.2011).
மின்பாதை அமைக்கும் பணிகளுக்காக மேற்கொள்ளப்படவிருக்கும் மின்தடை விவரம் வருமாறு:
தேதி: 27.6.2011:
பகல் (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
இரவு (மாலை 6மணிமுதல் காலை 6 மணி வரை):
இல்லை
28.6.2011:
பகல் (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
இரவு (மாலை 6மணிமுதல் காலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
29.6.2011 முதல் 5.7.2011 வரை:
பகல் (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
இரவு (மாலை 6மணிமுதல் காலை 6 மணி வரை):
இல்லை
6.7.2011:
பகல் (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
இரவு (மாலை 6மணிமுதல் காலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
7.7.2011:
பகல் (காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை):
1 மணி நேரம் சுழற்சி முறையில்
இரவு (மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை):
இல்லை
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications