டீசல் கார்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியம் 30% உயரும்
Subscribe to Oneindia Tamil
மும்பை: பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார்களின் விற்பனை அதிகரித்து வருவதால், இந்தக் கார்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தை 30 சதவீதம் வரை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
மோட்டார் வாகன பிரிமியம் வருவாயுடன் ஒப்பிடும்போது, இழப்பீடு கோரப்படும் தொகை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால், காப்பீட்டு நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனால் டீசல் கார்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தை உயர்த்த காப்பீட்டு நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
பெட்ரோலுடன் ஒப்பிடும்போது டீசல் விலை 40 சதவீதம் குறைவாக உள்ளது. இதனால் டீசல் கார்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் இந்த ரக கார்கள் சந்திக்கும் விபத்துகளும் அதிகரித்து வருவதால், இழப்பீடுகள் கோருவதும் அதிகரித்துவிட்டது. இதனால் ப்ரீமியத்தை 30 சதவீதம் வரை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.












Click it and Unblock the Notifications