தூத்துக்குடி காகித குடோனில் பயங்கர தீ... கோடிக்கணக்கில் நஷ்டம்!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி நகரில் ஒரு காகித குடோன் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தது.
இதில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மார்கெட் பகுதியில் உள்ளது இந்தக் காகித குடோன். இசக்கி என்பவருக்கு சொந்தமானது இந்த குடோன். மிகப் பெரிய இந்தக் கிடங்கில் மூட்டை மூட்டையாக காகிதங்கள் மற்றும் பழைய பேப்பர் குவித்து வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை 5.30 மணிக்கு இந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. இதில் மளமளவென காகித மூட்டைகள் எரிந்தன. தூத்துக்குடி நகரின் கட்டடங்களை தாண்டி இந்த தீ பெரிதாகத் தெரிந்தது.
ஏராளமானோர் கூடியதால் அந்தப் பகுதியே பரபரப்பாகிவிட்டது. உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் சொல்லப்பட்டது. காலையிலிருந்து தீயை அணைக்கப் போராடி வருகின்றனர்.
இந்த விபத்தால் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குடோன் உரிமையாளர் தெரிவித்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
படம்: ஏ ஜான்













Click it and Unblock the Notifications