கோஷ்டிப் பூசல்- திமுக கூட்டத்தில் ரகளையில் குதித்த மாஜி அமைச்சர் செங்குட்டுவன் ஆதரவாளர்கள்
திருச்சி: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பெரும் கோஷ்டி மோதல் வெடித்தது. இதனால் பெரும் ரகளை ஏற்பட்டது.
துவரங்குறிச்சியில் திமுக சார்பில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சரான கே.என்.நேரு கலந்து கொண்டார். ஆனால் விழா அழைப்பிதழில் முன்னாள் அமைச்சரான புலவர் செங்குட்டுவனின் பெயர் இடம் பெறவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடந்த இடத்திற்கு திரண்டு வந்தனர்.
எப்படி செங்குட்டுவனின் பெயரைப் போடாமல் விடலாம் என்று கூறி மேடையில் இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமை மோசமாகத் தொடங்கியதால் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து போய் விட்டனர்.
திமுகவின் இந்த கோஷ்டி மோதல் பொதுமக்கள்மத்தியில் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications