முதல்வர் ஜெயலலிதாவை 29ம் தேதி சந்திக்கிறது சமச்சீர் கல்வி ஆய்வுக் குழு
சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வி ஆய்வுக் குழு வருகிற புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. முதல் கட்டமாக கடந்த ஆண்டு 1 மற்றும் 6 ஆகிய வகுப்புகளுக்கு இது அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் அனைத்து வகுப்புகளுக்கும் இது விரிவுபடுத்தப்படுவதாக இருந்தது.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் நடப்பு ஆண்டுக்கு சமச்சீர் கல்வித் திட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த ஆண்டு இதை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. அதை விசாரித்த உச்சநீதிமன்றம், 1, 6 ஆகிய வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தொடரலாம். பிற வகுப்புகளுக்கு அமல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைத்து 2 வாரங்களில் ஆராய வேண்டும். அந்த குழு அறிக்கையை உயர்நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதை ஒரு வாரத்திற்குள் விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது. தலைமைச் செயலாளர் தேவேந்திர நாத் சாரங்கி தலைமையிலான இக்குழுவில் மொத்தம் 9 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் இதுவரை 3 முறை கூடி ஆலோசனை நடத்தியுள்ளனர். இதையடுத்து வருகிற புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதாவை குழுவினர் சந்தித்து இதுவரை நடந்த பேச்சுக்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.
அதன் பின்னர் உச்சநீதிமன்றம் அறிவித்தபடி ஜூலை 6ம் தேதிக்குள் தங்களது அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications