For Daily Alerts
Just In
இந்தியா நெருக்கடி தரவில்லை: ராஜபக்சே
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் ஆகியோர் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிப்பதற்காக மட்டுமே வந்தனர் என்றும், தமக்கு அவர்கள் எந்த நெருக்கடியும் தரவில்லை என்றும் அவர் கூறினார்.
இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அதிகாரிகள் மூவரும் இந்த மாதத் தொடக்கத்தில் கொழும்பு சென்றிருந்தனர்.
அவர்களின் வருகை குறித்த கேள்விக்கு ராஜபக்சே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
Comments
English summary
Sri Lankan president Rajapaksa told that India hasn't give any pressure to him on political solution to Sri Lankan Tamils.
Story first published: Tuesday, June 28, 2011, 19:50 [IST]