மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கம்
சென்னை: தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் சில மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கட்சி பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை மாநகர மாவட்ட செயலாளற் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதில் ஏ.கே.போஸ் அப்பதவியில் நியமிக்கப்படுகிறார்.
திருநெல்வேலி மாவட்ட செயலாளராக செந்தூர்பாண்டியன் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை மாநகர் மாவட்டச் செயலாளராக இருந்து வந்த பாப்புலர் முத்தையா, டாஸ்மாக் மது கடைகளில் பார்களை நடத்த விடப்பட்ட ஏலத்தில் பெருமளவில் கடைக்காரர்களிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
சிவகாசி எம்.எல்.ஏ. ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருக்கும் சுப்பு (எ) பே.சுப்ரமணியன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார். திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் என்.ஆர்.சிவபதி (கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்) நியமிக்கப்படுகிறார்.
அருப்புக்கோட்டை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவசாமி விவசாய பிரிவு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications