கார்கில் வெற்றியை கேவலப்படுத்தியதாக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
சென்னை: கார்கில் வெற்றியை கேவலப்படுத்தியதாக கூறி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக சென்னையைச் சேர்ந்த ராஜன் என்பவர் விஜயகாந்த் மீது உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில்,
ரிஷிவந்தியம் தொகுதியில் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்த பிறகு, பத்திரிகைகளுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், எப்படிப்பட்ட தேர்தல் வியூகம், திட்டம் வகுத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டனர்.
பாகிஸ்தானுடன் கார்கில் உள்ளிட்ட போர்களை நடத்தியபோதே இந்தியா எந்த வியூகமும் வகுக்கவில்லை என்று அதற்கு விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டு உள்பட பாகிஸ்தான் தொடர்பான எந்தவொரு விவகாரத்திலும் மக்கள் மிகுந்த உணர்ச்சிமயமாகிவிடுவார்கள். இந்த நிலையில் இப்படிப்பட்ட ஒரு அவதூறான கருத்தை மக்கள் மத்தியிலும், பாதுகாப்பு படையினர் மத்தியிலும் பரப்பியிருப்பது குற்றமாகும்.
இந்திய ராணுவத்துக்கு எதிரான அவதூறு கருத்துகளை விஜயகாந்த் கூறியிருக்கிறார். இப்படி அவர் பேசியது, இந்திய தண்டனைச் சட்டத்தின் 131, 133 மற்றும் 135-ம் பிரிவுகளின் கீழ் தண்டனைக்குரியதாகும்.
இந்திய அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை, பற்றுள்ளவர்களுக்குத்தான் சங்கம் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரம் தரப்படுகிறது. ஆனால் அவதூறாக பேசி அதை விஜயகாந்த் மீறியுள்ளார். எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை தே.மு.தி.க. இழந்துவிட்டது.
தமிழகத்தில் 41 தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுகிறது. அங்கீகாரத்தை இழப்பதால் அந்த கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விஜயகாந்தை குறுக்கு விசாரணை செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமையிலான பெஞ்ச், மனுவைப் பார்க்கும்போது எந்தவொரு முகாந்திரமும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications