புலிகளின் ரூ 1800 கோடிக்கு குறி வைக்கும் ராஜபக்சே குடும்பம்!

தனி ஈழம் கேட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மூலமும், கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தியதன் மூலமும் பணம் சேர்த்து வந்தது.
இந்தப் பணத்தில் ஒரு பகுதி ரூ.1800 கோடி வரை, வெளிநாட்டு வங்கிகளில் வைப்பு நிதியாக உள்ளது என செய்திகள் வெளியாகின.
உலகின் 5 முக்கிய நாடுகளின் 8 முன்னணி வங்கிகளில் வைப்பு நிதியாக இந்தத் தொகை வைக்கப்பட்டுள்ளது. இவற்றில் அதிக அளவு பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில்தான் உள்ளது.
சமீபத்தில் கனடா போலீசார் அங்குள்ள வங்கிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 4 பெரிய வங்கிகளில் புலிகளுக்கு கணக்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் தமிழ் அமைப்புகளை சேர்ந்த 21 முக்கிய பிரமுகர்கள் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்பட்டன.
இதுபோன்று நெதர்லாந்தில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணையின் போதும் வங்கி கணக்குகள் பற்றிய விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்த தகவல்களை முழுமையாகக் கொடுத்தவர் இப்போது ராஜபக்சேவின் நெருங்கிய நண்பனாக மாறிவிட்ட கேபி எனும் குமரன் பத்மநாபனே.
வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள இந்த பணத்தை கைப்பற்ற சிங்கள அரசு தீவிரமாக உள்ளது. குறிப்பாக ராஜபக்சே குடும்பத்தினர் இந்தப் பணத்தை கைப்பற்றிவிடுவார்கள் என சிங்கள அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இறுதிப் போர் நடந்த வன்னிப் பகுதியில் புலிகள் வைத்திருந்த டன் கணக்கான தங்கத்தையும், ரொக்கப் பணத்தையும் மொத்தமாக சுருட்டிக் கொண்டது ராஜபக்சே குடும்பம் என ஏற்கெனவே பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications