சாதிக் பாட்சா மரணம் தற்கொலையல்ல, கொலை -சிபிஐ

இதையடுத்து சாதிக் பாட்சாவின் (37) மரண அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்யுமாறு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு (AIIMS) கோரிக்கை விடுக்க சிபிஐ முடிவு செய்துள்ளது.
ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரைச் சேர்ந்த சாதிக் பாட்சா, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். 2ஜி வழக்கில் இவர் ஒரு முக்கியப் புள்ளியாக கருதப்பட்டார். இவரிடம் சிபிஐ அதிரடி விசாரணை நடத்தியிருந்தது. இவரது தொழில் அலுவலகங்களில் ரெய்டுகளும் நடத்தப்பட்டிருந்தன.
இந் நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கடந்த மார்ச் 16ம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் பாட்ஷா. சிபிஐ விசாரணையால் மன உளைச்சலில் தவித்து வந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கூறினர்.
ஆனால் சம்பவம் நடந்து பல மணி நேரத்திற்குப் பிறகுதான் பாட்ஷாவின் மரணம் குறித்த தகவல் வெளியானதால் அதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது.
பாட்ஷா மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்ததால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது திமுக அரசு. இந் நிலையில் பாட்சா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சிபிஐ கருதுகிறது.
வீட்டில் சாதிக் பாட்சாவின் உடல் இருந்த நிலையைப் பார்த்தால், அது தற்கொலை போலத் தெரியவில்லை என்றும், அவரது உடலை பிரதேசப் பரிசோதனை செய்த அரசு டாக்டர் டெக்கால், இது மூச்சுத் திணறடிக்கப்பட்டு (asphyxia) ஏற்பட்ட மரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பாட்சாவின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் மருத்துவர் கூறியுள்ளார். எனவே, சிபிஐக்கு இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பாட்சாவின் குடல் பாகங்கள் குறித்த மருத்துவ ஆய்வறிக்கைக்காக சிபிஐ காத்துக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சிபிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் பாட்ஷா தற்கொலை செய்து கொண்டது போன்ற சூழல் காணப்பட்டாலும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதற்கான முகாந்திரங்கள் தற்போது கிடைத்துள்ளன. எனவே உள்ளூர் போலீஸார் கூறியது போல இது தற்கொலை அல்ல, கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். குற்றம் நடந்த இடம், அதற்கான சூழல், கிடைத்துள்ள சாட்சியங்களின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளோம். இருப்பினும் இதை உறுதிப்படுத்திக் கொள்ள தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
ஒரு டாக்டர்கள் குழுவை அமைத்து சாதிக் பாட்சாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆய்வு செய்யுமாறு அகில இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் கோர சிபிஐ முடிவு செய்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications