7-ம் தேதி திருப்பதி கோவிலில் 4 ஆயிரம் பேர் சாப்பிடும் அன்னதான கூடம் திறக்கும் பிரதீபா பாட்டீல்
ஹைதராபாத்: ஒரே நேரத்தில் 4 ஆயிரம் பேர் அமர்ந்து உணவருந்தும் வகையில் பெரிய அன்னதான கூடம் திருப்பதி கோவிலில் கட்டப்பட்டுள்ளது. இதை வரும் 7-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் திறந்து வைக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அங்கு ஆண்டு முழுவதும் அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து வருகிறது தேவஸ்தானம்.
அங்கு ஏற்கனவே இருக்கும் அன்னதான கூடத்தில் குறைந்த பேர் தான் அமர்ந்து சாப்பிட முடியும். இதனால் பக்தர்கள் வசதிக்காக ஒரு நேரத்தில் 4 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் பெரிய அன்னதான கூடம் கட்டப்பட்டுள்ளது.
இதை வரும் 7-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் திறந்து வைக்கிறார். அவருடன் உறவினர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் திருப்பதிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு தேவஸ்தானம் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் 400 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய அன்னதானக் கூடத் திறப்பு விழாவில் ஆந்திர ஆளுநர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications