மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசன டிக்கெட் கட்டணம் உயர்வு-பக்தர்கள் அதிர்ச்சி
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தரிசன டிக்கெட் கட்டணம் திடீர் என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்திய அளவில் புகழ் பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
இக் கோவில்களுக்கு தமிழகத்தில் மட்டுமின்றி அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வட மாநிலம் பகுதிகளிலும் இருந்தும் தினசரி பல நூறு பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், அதிக அளவில் வெளி நாட்டு பயணிகளும் வந்து கோவில் கலைஅம்சம் குறித்து பார்த்து வியந்த வண்ணம் செல்கின்றனர்.
இந்த நிலையில், கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் இதுவரை ரூ 15 மட்டுமே வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்த கட்டணத்தை கோவில் நிர்வாகம் திடீரென தற்போது ரூ. 50 ஆக உயர்த்தி உள்ளது.
மேலும், பக்தர்கள் செல்லும் இலவச தரிசன பாதையையும் இரு பிரிவுகளாக்கி ஒரு பிரிவு வழியாக செல்வதற்கு ரூ.15 கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த திடீர் கட்டண உயர்வு பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய பலரும் குடும்பத்தினருடன் வருவதால் ஒரு முறை சாமி தரிசனம் செய்ய அதிக கட்டணம் செலுத்த வேண்டிய இருக்கும். இதனால் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு இந்த கட்டண உயர்வு ஒரு சுமையாக இருக்கும்.
எனவே, பக்தர்கள் நலன் கருதி முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரத்தில் தலையிட்டு பழைய கட்டணமே இருக்குமாறு செய்ய வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications