தெலுங்கானாவில் 2 நாள் பந்த்-தனி மாநில கூட்டுப் போராட்டக் குழு அறிவிப்பு
ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு நாட்கள் பந்த் நடத்த தெலுங்கானா தனி மாநில கூட்டுப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
ஆந்திராவில் தெலுங்கானா விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி எம்.பி, எம்.எல்.ஏக்கள், எம்எல்சிக்கள் ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ள நிலையில் தற்போது கூட்டுப் போராட்டக் குழுவும் களத்தில் குதித்துள்ளது.
தெலுங்கானா பகுதியில் 48 மணி நேர பந்த்துக்கு அது அழைப்பு விடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை இந்தப் போராட்டம் நடைபெறும் என்று அது அறிவித்துள்ளது.
மாணவர்கள், தொழில்துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இதில் பங்கேற்கவுள்ளதாகவும் அது அறிவித்துள்ளது. இதனால் தெலுங்கனா பகுதி மீண்டும் போர்க்களமாக மாறும் சூழல் உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications