13 வயது சிறுவனை ராணுவம் சுட்டுக் கொன்றது இந்திய வரலாற்றில் நடந்திராத சம்பவம்-வைகோ

இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இந்திய வரலாற்றிலேயே இதுவரை நடந்திராத கொடூரமாக 13 வயது சிறுவன் தில்ஷன் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.
ராணுவக் குடியிருப்பில் உள்ள மரங்களில் மாம்பழங்கள், பாதாம் கொட்டைகளை சிறுவர்கள் பறிப்பது என்பது வழக்கமான ஒன்று. அவர்கள் அவ்வாறு செய்வதால் எந்த ஆபத்தும் வந்துவிடப்போவதில்லை. பழம் பறி்க்க வந்த சிறுவனை எச்சரிக்காமல், தலையில் குறிபார்த்து சுட்டுக் கொன்றுள்ளது இரக்கமற்ற செயல் ஆகும்.
உயிரற்று தொங்கிய சிறுவனை ராணுவத்தினர் இழை, தலைகளைக் கொண்டு மறைத்துள்ளனர். ரத்தக் கறைகளையும் தண்ணீரால் கழுவி உள்ளனர். இத்தனையும் அங்குள்ள உயர் அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை.
அவன் உடன் சென்ற சிறுவர்கள் ஓடிவந்து தகவல் கொடுத்ததும் பெற்றோரும், உறவினர்களும், குடிசைவாழ் பகுதி மக்களும் அங்கு திரண்டு சென்ற பிறகு தானே உண்மை வெளியில் வந்துள்ளது.
இந்த சம்பவத்தையே மூடி மறைக்கும் வகையில் ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லவில்லை என்று ஒரு செய்தியைப் பரப்ப முயற்சி மேற்கொண்டனர்.
சிறுவனை சுட்டுக் கொன்ற கொலையாளியை ராணுவ உயர் அதிகாரிகள் தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். அந்தக் கொலையாளியை உடனே கைது செய்து சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications