ராகுல் காந்தியின் 'விவசாயிகள் தோழன்' அவதாரம்!

உத்தர பிரதேசத்தில் உள்ள விவசாயிகள் படும்பாட்டை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வர காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பாத யாத்திரை துவங்கியுள்ளார். நில அபகரிப்பு நடந்துள்ள பட்டா பர்சௌல் கிராமத்தி்ல இருந்து தனது யாத்திரையைத் துவங்கினார்.
வாக்காளர்கள் அதிகமுள்ள உத்தர பிரதேசத்தில் நலிந்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடு்ககத் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் ராகுல். 1980கள் வரை உத்தப் ரபிரதேசத்தில் காங்கிரஸ் கொடிகட்டிப் பறந்தது. அதன் பிறகு பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகியவை ஆதிக்கம் செலுத்தத் துவங்கின. ராகுலின் பிரசாரத்தால் கடந்த 2009ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 21 இடங்கள் கிடைத்து.
தற்போது முதல்வர் மாயாவதி அரசு குற்றச்சாட்டு மேல் குற்றச்சாட்டில் சிக்கித் தவிக்கிறது. இந்நிலையில் தான் ராகுல் மாயாவதி அரசைக் கண்டித்து பாதயாத்திரை துவங்கியுள்ளார்.
இன்று பட்டாவில் இருந்து புறப்பட்ட அவர் ரஸ்தம்பூர் மற்றும் பாய்பூரில் உள்ள மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டார். கிராமம் கிராமமாக குறை கேட்கவிருக்கிறார்.
160 கிமீ நெடுஞ்சாலை அமைப்பதற்காக மாயாவதி அரசு விவசாயிகளின் நிலங்களை அபகரித்தது. இதனால் அங்கு பெரும் போராட்டம் வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ராகுல் கூறியதாவது,
நான் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். வெளி உலகத்தாருக்கு இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இங்கிருந்து ஆக்ரா வரை நடப்பது பற்றி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த யாத்திரை மூலம் எங்கெல்லாம் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது என்று கிராமத்தினரிடம் இருந்து தெரிந்து கொள்வேன்.
ராகுலுக்கு வழி நெடுகிலும் கிராமத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.
வரும் 9ம் தேதி அலிகாரில் நடக்கும் விவசாயிகள் மகாபஞ்சாயத்தில் ராகுல் கலந்து கொள்கிறார். ஆனால் இந்த பஞ்சாயத்துக்கு மாயாவதி அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications