பத்மநாப சுவாமி கோயில் பொக்கிஷம்: தொல்லியல் துறையின் ஆலோசனை கோரும் உச்ச நீதிமன்றம்

அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப் போகின்றனரா? தொல்லியல் துறையினர் குழுவை நியமித்து பாதுகாக்கப் போகின்றனரா? . குழுவினரின் பெயரை பரிந்துரைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நகைகள், வைரங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட அந்த பொக்கிஷங்கள் குறித்த மூல வரலாறு, அவற்றின் தொன்மை ஆகியவை குறி்த்தும் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் ஆர்.வி. ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் ஆகியோர் அடங்கிய குழு, இன்று இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
நீதிபதிகள் மேலும் கூறுகையில், நகைகள் பற்றி இதுவரை சரியாக மதிப்பிடப்படவில்லை. கடைசி அறையில் இருக்கும் நகைகளையும் கணக்கெடுத்த பின்பே நகைகளின் உண்மையான மதிப்பு தெரிய வரும்
எனவே நகைகளின் மதிப்பு குறித்து உச்சநீதிமன்றம் நியமித்துள்ள குழுவினரோ, அரச குடும்பத்தினரோ யாரும் ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, பல நூற்றாண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த பத்மநாப சுவாமி கோயிலின் 5 ரகசிய அறைகள் திறக்கப்பட்டன. இதுவரை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், ஆபரணங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, வரும் 8 ம் தேதி கோவிலில் உள்ள கடைசி அறையை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனை திறப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளதால் திறப்பது தாமதமாகி வந்தது. தற்போது அந்த அறையையும் திறந்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொக்கிஷங்களை அரசு கோராது-கேரள முதல்வர்:
இந் நிலையில் இந்தக் கோவிலில் கிடைத்துள்ள பொக்கிஷங்கள் அனைத்துமே கோவிலுக்கே சொந்தமானவை. அவற்றை அரசு கோராது. அந்த பொக்கிஷங்களை கோவிலிலேயே வைத்து பாதுகாக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பை அரசு வழங்கும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications