திமுகவுடன் உறவு வலுவாக உள்ளது-தயாநிதி மாறன் குறித்து காங். பேச மறுப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: திமுகவுடன் கூட்டணி தொடர்கிறது, உறவு வலுவாக உள்ளது என்று கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, தயாநிதி மாறன் ராஜினாமா குறித்து கருத்துக் கூற மறுத்து விட்டது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய நிகழ்வுகளால் திமுக, காங்கிரஸ் இடையிலான உறவில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம் போல வலுவாகவே உள்ளது.
தயாநிதி மாறன் குறித்து அரசுதான் கருத்து தெரிவிக்க வேண்டும். அரசு கருத்து தெரிவித்த பின்னர் காங்கிரஸ் இதுகுறித்து பேசும்.
ஊழல் குறித்துப் பேசும் பாஜக முதலில் கர்நாடகத்தில் நடப்பது குறித்து விளக்க வேண்டும். தன்னைப் பற்றி முதலில் சுய பரிசோதனை செய்து கொள்ள அது முன்வர வேண்டும். பின்னர் மற்றவர்கள் மீது அவர்கள் பழி சுமத்தலாம் என்றார்.












Click it and Unblock the Notifications