டெல்லி வீட்டை காலி செய்தார் தயாநிதி-கருணாநிதியுடன் பேசினார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தயாநிதி மாறன் தனது டெல்லி வீட்டை காலி செய்தார்.

2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ-ன் விசாரணை வளையத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் பெயர் இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்ததையடுத்து அவரை உடனே பதவி விலகக் கோரி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் டெல்லியில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். அப்போது அவரை பதவி விலகச் சொல்லி எதிர்கட்சிகள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது. இதையடுத்து கூட்டத்தின் பாதியிலேயே அவர் வெளியேறினார்.

அதன் பின்னர் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது தெரியவில்லை.

இந்நிலையில் தயாநிதி மாறன் இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். கால் மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது தனது ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.

ராஜினாமா கடிதத்தை கொடுத்த கையோடு தனது டெல்லி வீட்டைக் காலி செய்தார் மாறன்.

மாறனை சந்தித்த திமுக அமைச்சர்கள்:

தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு திமுக அமைச்சர்கள் அவரை சந்தித்து பேசினர். திமுக அமைச்சர்கள் காந்தி செல்வன் மற்றும் ஏகேஎஸ் விஜயன் ஆகியோர் மாறனை அவரது டெல்லி இல்லத்தில் வைத்து சந்தித்தனர்.

கருணாநிதியுடன் பேச்சு:

தனது பதவியை ராஜினாமா செய்யும் முன் திமுக தலைவர் கருணாநிதியுடன் தயாநிதி மாறன் தொலைபேசியில் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+