ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி கொழும்பில் மரணம்

Subscribe to Oneindia Tamil

Karthigesu Sivathamby
கொழும்பு: புகழ் பெற்ற ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி கொழும்பில் உள்ள தனது வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

நேற்று இரவு அவர் மரணமடைந்ததாக அவரது வீட்டினர் தெரிவித்துள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சிவத்தம்பிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிகிறது.

1932ம் ஆண்டு யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்தவர் சிவத்தம்பி. கரவெட்டி மற்றும் கொழும்பில் படித்த அவர் கொழும்பில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் கண்டி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் அவர் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் பல்கலைக்கழகத்திலும் இவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. 17 ஆண்டு காலம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சிவத்தம்பி, கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் 2 ஆண்டுகள் பணியாற்றினார்.

பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ்த் துறையில் வருகை தரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார் சிவத்தம்பி.

அக்காலத்தில் மேடை நாடகங்கள், வானொலி நாடகங்களிலும் சிவத்தம்பி நடித்துள்ளார்.

ஈழத் தமிழ் தொடர்பாக 70க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளதுடன், 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சர்வதேச மாநாடுகளில் சமர்ப்பித்துள்ளார்.

இவர் கடைசியாக கலந்து கொண்ட சர்வதேச மாநாடு, கோவையில் கடந்த திமுக ஆட்சியின்போது நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாடுதான். இந்த மாநாட்டுக்கு அவர் வருவது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இருப்பினும் தமிழுக்காக செல்கிறேன் என்று கூறி கலந்து கொண்டார்.

84 வயதான சிவத்தம்பியின் மறைவு ஈழத் தமிழுக்கு மட்டுமல்லால், உலகத் தமிழர்களுக்கும் பேரிழப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+