கேரள மாணவி கற்பழிப்பு வழக்கு- முன்ஜாமீன் கோரி தலைமறைவு சப் இன்ஸ்பெக்டர் மனு
கொச்சி: கொச்சியில் 18 வயது மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெகட்ர் சக்திவேல் முன்ஜாமீன் கோரி கொச்சி கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கொச்சியைச் சேர்ந்த 18 வயது மாணவியை அவரது பெற்றோரே சீரழித்து விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதை விட பரபரப்பாக அந்த மாணவியை கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திராவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கற்பழித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இதுவரை 98 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலரை இந்த வழக்கில் போலீஸார் தேடி வருகின்றனர். அவர்களில் ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல். இவர் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். ஒரு மாதத்திற்கு முன்பு இவரை ஸ்ரீவைகுண்டத்திற்கு இடமாறுதல் செய்தனர். ஆனால் கொச்சி வழக்கில் சிக்கி தேடப்பட்டதால் பணியில் சேராமல் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார் சக்தி வேல்.
இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி கொச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு 12ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகியுள்ள கோவையைச் சேர்ந்த முருகேசன், மீரான் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீ்ன் மனுக்கள் மீதான விசாரணை இன்று கொச்சி கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications