பூட்டுப் பிரச்சனை: பத்மநாப சுவாமி கோவில் 6- வது பாதாள அறை திறப்பு ஒத்திவைப்பு
டெல்லி: பத்மநாப சுவாமி கோவிலின் 6-வது பாதாள அறையை தேதி குறிப்பிடும் வரை திறக்க வேண்டாம் என்று இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் 6 பாதாள அறைகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் நியமித்த 7 பேர் கொண்ட குழு முன்பு அவற்றை திறந்து அதில் உள்ள பொக்கிஷங்களைக் கணக்கிடும் பணி நடந்து வருகிறது. இதுவரை 5 பாதாள அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
அவற்றில் இருந்து தங்க, வைர, வைடூரிய நகைகள். சாமி சிலைகள், தங்க காசுகள் என விலைமதிப்பற்ற பொருட்கள் கிடைத்துள்ளன. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 6-வது பாதாள அறையை திறக்க முயன்றபோது அதன் பூட்டை திறக்க முடியவில்லை. இந்த அறைகள் கடந்த 135 ஆண்டுகளுக்கு மேல் பூட்டியே கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பூட்டை உடைத்தால் உள்ளே இருக்கும் பழமையான பொருட்களுக்கு ஏதேனும் சேதம் வந்துவிடுமோ என்று அதிகாரிகள் அஞ்சினர். இதையடுத்து 6-வது அறையைத் திறக்கலாமா, வேண்டாமா என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மறுதேதி குறிப்பிடும் வரை 6-வது பாதாள அறையைத் திறக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை பாதுகாக்க மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேரள அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
6-வது பாதாள அறையைத் திறக்க பூட்டு மட்டும் காரணமன்று. பாதுகாப்பு கருதியும் தான் இந்த அறையைத் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications