என்.எல்.சியில் இருந்து தமிழகத்திற்கு நேரடி மின்சாரம்-மத்திய அரசு திட்டம்

நெய்வேலியில் செய்தியாளர்களி்டம் அவர் கூறியதாவது: இந்திய அளவில் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சிக்கு, சிறு சிறு இடையூறுகள் ஏற்படுவது சாதாரணமான ஒன்று தான். பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில், என்.எல்.சி. குறித்து ஒரு சிலர் பரப்பிய அவதூறு பொருட்படுத்தக்கூடியது அல்ல.
என்.எல்.சி.தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் இன்ஜினியர்கள், அதிகாரிகள் சங்க நிர்வாகிகளிடம் அரசு ஆலோசனை நடத்தியது.
இதில், என்.எல்.சி. நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாராட்டியதுடன், இன்ஜினிர்களுக்கான காலியிடங்களை கேம்பஸ் இன்டர்வியூ இன்றி, பொது அழைப்பு மூலம் நிரப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இது குறித்து பரிசீலனை செய்யப்படும்.
என்.எல்.சியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, நேரடியாக தமிழக அரசுக்கு வழங்குவது குறித்து, இந்திய மின் பகிர்வு கழகத்திடம் ஆலோசனை நடத்தி வருகின்றோம்.
இதன் அடிப்படையில் எனது கேபினட் அமைச்சர் ஜெய்ஸ்வால் பிரகாஷ் இது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றார்.












Click it and Unblock the Notifications