மாஞ்சோலை தொழிலாளர்கள் நினைவு நாள்-அனைத்துக் கட்சி கூட்டம்
நெல்லை: மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் ஆற்றில் மூழ்கி பலியான நாள் அனுஷ்டிக்கப்படுவதை ஓட்டி நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று 9ம் தேதி அனைத்து கட்சிகள், அமைப்புகள் கூட்டம் நடந்தது.
கடந்த 1999ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி கூலி உயர்வு கேட்டு போராடி சிறையில் அடைக்கப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்றபோது கலவரம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தினர்.
இதில் தப்பியோடியபோது 17 பேர் ஆற்றில் மூழ்கி இறந்தனர். ஆண்டுதோறும் ஜூலை 23ம் தேதி பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்களை சேர்ந்தவர்கள் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஆற்றில் உயிர் நீத்தவர்களுக்கு 12வது ஆண்டாக வரும் 23ம் தேதி அஞ்சலி செலுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு கட்சியினருக்கும் அஞ்சலி செலுத்த தனிதனியே நேரம் ஓதுக்கப்படுகிறது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று காலை 11 மணிக்கு கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் அனைத்து கட்சி, அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications