மன்மோகன் சிங்குடன் சோனியா முக்கிய ஆலோசனை- நாளை அமைச்சரவை மாற்றம்?

அமைச்சரவை மாற்றம் இன்று மாலை இடம் பெறலாம் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இது ஒரு நாள் தள்ளிப் போயுள்ளது. அதன்படி நாளை அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் ஊழல் புகார்களால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பெயர் தாறுமாறாக கெட்டுப் போயுள்ளது. வலுவான எதிர்க்கட்சி என்று மத்தியில் எதுவும் இல்லாமல் போனதால் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி ஆட்சியும் பெரும் சிக்கலில் மாட்டாமல் நழுவி வருகின்றன.
இருப்பினும் மக்களிடையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான அதிருப்தி நாளுக்கு நாள் பெருகி வருவதால் கவலை அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி அமைச்சரவை மாற்றத்திற்குத் திட்டமிட்டுள்ளது.
இந்த அமைச்சரவை மாற்றம் குறித்து நீண்டநாட்களாகவே பேசப்பட்டு வந்தபோதிலும் தற்போதுதான் அது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இதுவரை 3 முறை சோனியா காந்தியும், பிரதமரும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சோனியா காந்தி வந்தார். அங்கு இருவரும் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது அமைச்சரவை மாற்றம் குறித்து இறுதி ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக, இன்று மாலையில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அது ஒரு நாள் தள்ளிப் போயுள்ளது. அதன்படி நாளை அமைச்சரவை மாற்றம் இடம் பெறும் என்று தெரிகிறது.
நிதித்துறை, உள்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாற்றப்பட மாட்டார்கள். சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் அது உறுதியாகத் தெரியவில்லை. கபில் சிபல் வசம் தொடர்ந்து தொலைத் தொடர்புத்துறை நீடிக்கும் என்று தெரிகிறது.
திமுக சார்பில் புதிதாக 2 பேரை சேர்க்க வேண்டியுள்ளது. ஆனால் இதுவரை திமுக தரப்பிலிருந்து பட்டியல் எதையும் கொடுத்துள்ளார்களா என்பது தெரியவில்லை.
சில அமைச்சர்கள் நீக்கப்படலாம். சில புதுமுகங்கள் இடம் பெறலாம். நடிகர்கள் சிரஞ்சீவி, ராஜ் பாபர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
கோபால் சுப்ரமணியம் ராஜினாமாவால் தாமதமா?:
இதற்கிடையே, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெறாமல் நாளைக்கு தள்ளிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் கோபால். மேலும் உ.பி அருகே நடந்த கோர ரயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவத்தால் இன்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவை மாற்றம் நாளைக்குத் தள்ளிப் போயுள்ளதாக தெரிகிறது.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications