மன்மோகன் சிங்குடன் சோனியா முக்கிய ஆலோசனை- நாளை அமைச்சரவை மாற்றம்?

அமைச்சரவை மாற்றம் இன்று மாலை இடம் பெறலாம் என்று முன்பு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இது ஒரு நாள் தள்ளிப் போயுள்ளது. அதன்படி நாளை அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் ஊழல் புகார்களால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பெயர் தாறுமாறாக கெட்டுப் போயுள்ளது. வலுவான எதிர்க்கட்சி என்று மத்தியில் எதுவும் இல்லாமல் போனதால் காங்கிரஸ் கட்சியும், அதன் கூட்டணி ஆட்சியும் பெரும் சிக்கலில் மாட்டாமல் நழுவி வருகின்றன.
இருப்பினும் மக்களிடையே ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீதான அதிருப்தி நாளுக்கு நாள் பெருகி வருவதால் கவலை அடைந்துள்ள காங்கிரஸ் கட்சி அமைச்சரவை மாற்றத்திற்குத் திட்டமிட்டுள்ளது.
இந்த அமைச்சரவை மாற்றம் குறித்து நீண்டநாட்களாகவே பேசப்பட்டு வந்தபோதிலும் தற்போதுதான் அது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக இதுவரை 3 முறை சோனியா காந்தியும், பிரதமரும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த நிலையில் இன்று காலை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு சோனியா காந்தி வந்தார். அங்கு இருவரும் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது அமைச்சரவை மாற்றம் குறித்து இறுதி ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
முன்னதாக, இன்று மாலையில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அது ஒரு நாள் தள்ளிப் போயுள்ளது. அதன்படி நாளை அமைச்சரவை மாற்றம் இடம் பெறும் என்று தெரிகிறது.
நிதித்துறை, உள்துறை, பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாற்றப்பட மாட்டார்கள். சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இருப்பினும் அது உறுதியாகத் தெரியவில்லை. கபில் சிபல் வசம் தொடர்ந்து தொலைத் தொடர்புத்துறை நீடிக்கும் என்று தெரிகிறது.
திமுக சார்பில் புதிதாக 2 பேரை சேர்க்க வேண்டியுள்ளது. ஆனால் இதுவரை திமுக தரப்பிலிருந்து பட்டியல் எதையும் கொடுத்துள்ளார்களா என்பது தெரியவில்லை.
சில அமைச்சர்கள் நீக்கப்படலாம். சில புதுமுகங்கள் இடம் பெறலாம். நடிகர்கள் சிரஞ்சீவி, ராஜ் பாபர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
கோபால் சுப்ரமணியம் ராஜினாமாவால் தாமதமா?:
இதற்கிடையே, சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமணியம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் அமைச்சரவை மாற்றம் இன்று நடைபெறாமல் நாளைக்கு தள்ளிப் போயுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார் கோபால். மேலும் உ.பி அருகே நடந்த கோர ரயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த சம்பவத்தால் இன்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவை மாற்றம் நாளைக்குத் தள்ளிப் போயுள்ளதாக தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications