பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான அமெரிக்க ராணுவ உதவிகள் நிறுத்தபப்ட்டுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகி்ஸ்தான், இதனால் நாங்கள் கவலைப்படப் போவதில்லை என்று கூறியுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான போரில், பாகிஸ்தானையும் தன்னுடன் இணைத்து செயல்படுகிறது அமெரிக்கா. ஆனால் இதில் பாகிஸ்தானின் ஒத்துழைப்பு சரிவர இல்லை என்பது அமெரிக்காவின் குற்றச்சாட்டு. இருந்தாலும் வேறு வழியில்லாமல் தொடர்ந்து அதனுடன் இணைந்து செயல்பட வேண்டிய நிலையில் அது உள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டது. இதனால் கோபமடைந்த அமெரிக்கா தற்போது அமெரிக்காவுக்கான ராணுவ உதவியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா அளிப்பதாக இருந்தது. தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் கர்னல் டேவ் லபான் கூறுகையில், கடந்த எட்டு மாதங்களில் நடந்த பல்வேறு தொடர்ச்சியான சம்பவங்கள் இரு தரப்பு உறவுகளைப் பாதித்துள்லன. இதன் விளைவாக அமெரிக்க ராணுவ பயிற்சியாளர்கள் எண்ணிக்கையை குறைக்குமாறு கூறியுள்ளது பாகிஸ்தான்.
இது தற்காலிகமான நடவடிக்கைதான் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டாலும், பாகிஸ்தான் ராணுவத்திற்குத்தேவையான உதவிகளையும், ஆதரவையும், பயிற்சியையும் தர முடியாத நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் பொது உறவுத் துறை இயக்குநர் கூறுகையில், பாகிஸ்தானுக்கு எந்தவிதமான வெளிநாட்டு உதவியும் தேவையில்லை. வடக்கு வசிரிஸ்தானிலும், ஸ்வாட் பகுதியிலும் நாங்கள் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களில் எந்தவிதமான வெளிநாட்டு உதவியும் இடம் பெறவில்லை என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம் என்றார்.
-
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications