நாங்குநேரி சுங்கச்சாவடியில் ரூ. 1.5 லட்சம் கையாடல்: மேலாளர் கைது
நாங்குநேரி: நெல்லை-கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் நாங்குநேரியில் புதிதாக அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் இருந்து ரூ. 1.5 லட்சத்தை திருடிய மேலாளர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை-கன்னியாகுமரி நான்கு வழிச் சாலையில் நாங்குநேரியில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நேற்று மாலை திடீரென நாங்குநேரி சுங்கசாவடி அலுவகத்தில் தணிக்கை செய்ய வந்தனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த திருச்சியைச் சேர்ந்த மேலாளர் ஆசைதம்பி குடிபோதையில் இருந்துள்ளார். தணிக்கைக்கு வந்த ஆடிட்டர் ஜெகதீஷ் என்பவரை தரக்குறைவாக பேசி மிரட்டிவிட்டு அங்கிருந்து வெளியேறி ஆம்னி வேனில் சென்று விட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த ஆடிட்டர் ஜெகதீஷ் கலெக்டருக்கு தகவல் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் நாங்குநேரி தாசி்ல்தார் மற்றும் போலீசார் அங்கு அலுவலக ஊழியர்கள் முன்னிலையில் கணக்கு பதிவேடுகள், பணம் கையிருப்பு ஆகியவற்றை சரிபார்த்தனர்.
அதில் 9-ம் தேதி ரூ.7 லட்சம், 10-ம் தேதி மாலை 4 மணி வரை ரூ. 4.6 லட்சம் என மொத்தம் ரூ.11.6 லட்சம் வசூலானதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால் கையிருப்பு ரூ.10 லட்சம் மட்டுமே இருந்தது. ரூ.1 லட்சத்து 59 ஆயிரத்து 895 குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து ஆடிட்டர் ஜெகதீஷ் நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமறைவான ஆசைதம்பியை கைது செய்து அவர் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications