ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரத்தை மக்களுக்கும் தெரிவிக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரங்களை கேட்பவர்களுக்கு தகவல் வழங்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னையைச் சேர்ந்த சமூகசேவகர் மாதவன் மாநில தகவல் ஆணையத்தின் ஒரு உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பல்வேறு தகவல்களை பெற்று வருகிறேன். இந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து தகவல் கேட்டால், அவர்களின் தனிப்பட்ட விஷயம் பாதிக்கப்படுவதாக கூறி பொது தகவல் அதிகாரிகளும் மாநில தகவல் ஆணையமும் தகவல் வழங்க மறுக்கிறது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆண்டுதோறும் தங்கள் சொத்து விவரங்களை அரசுக்கு தெரிவிக்கிறார்கள். அவர்கள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாவிட்டாலும் அரசு பணி செய்வதால் மக்களின் சேவகர்கள்தான். அவர்களின் சொத்துவிவரங்களை அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமை இருக்கிறது. எனவே, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரங்களை வழங்குவதற்கு மாநில தகவல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.
தகவல் ஆணையத்திற்கு உத்தரவு
இந்த மனு நீதிபதிகள் டி.முருகேசன், கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், "ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லையென்றாலும் மக்களின் வரிப்பணத்தை சம்பளமாக பெறுவதால் மக்களின் சேவகர்கள்தான். அவர்களின் சொத்து விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள முழு உரிமை உள்ளது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை ஆண்டுதோறும் அரசுக்கு தெரிவிக்கிறார்கள்.
அரசிடம் தெரிவிக்கும் விவரங்களை வெளியே தெரிவிப்பதால் அதில் ரகசியம் ஒன்றும் இல்லை. எனவே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சொத்து விவரங்களையும் வழங்க வேண்டும் என்றும் மாநில தகவல் ஆணையத்திற்கும் பொதுத்துறை செயலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது," என அறிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications