நெல்லை பல்கலை. பிஎட் சேர்க்கையில் குளறுபடி, கோடிக்கணக்கில் மோசடி
நெல்லை: நெல்லை பல்கலைக்கழக பி்எட் சேர்க்கையில் குளறுபடி நடந்துள்ளதாக தொலைநெறி மற்றும் தொடர் கல்வி இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு தொலைநெறி மற்றும் தொடர் கல்வி இயக்கம் சார்பில் பிஎட் படிப்பு துவங்கப்பட்டது. இதற்கு நெலலை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள படித்த பட்டதாரிகள் மற்றும் பணியிலுள்ள இடைநிலை ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது.
இதனால் பிஎட் படிப்பில் சேர கடந்த 2008-09-ம் ஆண்டில் விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்தது.
2010-11ம் ஆண்டிற்கான பிஎட் சேர்க்கையில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பெண்கள் மற்றும் தகுதி அடிப்படையில் 500 பேர் சேர்க்கப்பட்டனர். இதற்கான இறுதி பட்டியல் 18-11-2010 அன்று வெளியிடப்பட்டது. இதில் குளறுபடி மற்றும் முறைகேடு நடந்திருப்பதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள தொலைநெறி மற்றும் தொடர்கல்வி இயக்குனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் நேற்று முன்தினம் தமிழக உயர்கல்வி துறை செயலாளர் கண்ணனிடம் அவர் புகார் கொடுத்துள்ளார். அதில் பிஎட் சேர்க்கையில் குளறுபடி செய்து கோடிக் கணக்கில் மோசடி நடந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விஜிலென்ஸ் மற்றும் சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications