Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ-சசிகலா 27ம் தேதி பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Sasikala and Jayalalitha
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் வரும் 27ம் தேதி முதல்வர் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் சசிகலா அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

1991-96 ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66 கோடி சொத்து சேர்த்ததாக இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது.

பெரும் இழுத்தடிப்புகளுடன் நடந்த இந்த வழக்கில் சமீபத்தில் தான் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது.

இந் நிலையில் வரும் 27ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாக்குமூலம் பதிவு செய்யப்படும்:

இதுகுறித்து அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா கூறுகையில், இன்று சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 2வது எதிரி சார்பில் வழக்கை ஒத்திவைக்க கோரினர். ஆனால் அதை நீதிபதி நிரகாரித்து விட்டார்.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட அனைவரும் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். தங்களது வாக்குமூ்லத்தை அளிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் அனைவரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+