நள்ளிரவில் மும்பையில் ப.சிதம்பரம், குண்டுவெடித்த இடங்களில் நேரில் ஆய்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை:
மும்பையில் குண்டுவெடிப்புகள் நடந்த இடங்களில் நேற்று நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ஒபேரா ஹவுஸ் பகுதியில் குண்டு வெடித்த இடத்தை பார்வையிட்ட ப.சிதம்பரம், காயமடைந்து அருகில் உள்ள சைபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களை சந்தித்து அவர்களது நிலைமை குறித்து விசாரித்தார்.
அவருடன் மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ்சவான், மாநில உள்துறை அமைச்சர் பாட்டீல் ஆகியோரும் உடன் சென்றனர்.
ஜாவேரி பஜார் பகுதியில் தடயவியல் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய சிதம்பரம், காவல் துறை உயர் அதிகாரிகளுடனும் பேசினார். ஆனால், எந்த இடத்திலும் நிருபர்களிடம் அவர் பேசவில்லை.












Click it and Unblock the Notifications