நள்ளிரவில் மும்பையில் ப.சிதம்பரம், குண்டுவெடித்த இடங்களில் நேரில் ஆய்வு
Subscribe to Oneindia Tamil

ஒபேரா ஹவுஸ் பகுதியில் குண்டு வெடித்த இடத்தை பார்வையிட்ட ப.சிதம்பரம், காயமடைந்து அருகில் உள்ள சைபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் டாக்டர்களை சந்தித்து அவர்களது நிலைமை குறித்து விசாரித்தார்.
அவருடன் மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ்சவான், மாநில உள்துறை அமைச்சர் பாட்டீல் ஆகியோரும் உடன் சென்றனர்.
ஜாவேரி பஜார் பகுதியில் தடயவியல் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய சிதம்பரம், காவல் துறை உயர் அதிகாரிகளுடனும் பேசினார். ஆனால், எந்த இடத்திலும் நிருபர்களிடம் அவர் பேசவில்லை.
பள்ளி-கல்லூரிகள் இயங்குகின்றன:
இந் நிலையில் மும்பையில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications