தெலுங்கானா ரயில் மறியல்: ஆந்திராவில் 116 ரயில்கள் ரத்து
சென்னை: தெலுங்கானாவை தனி மாநிலமாக்கக் கோரி ரயில் மறியல் நடப்பதால் ஆந்திராவில் 116 பயணிகள் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
தெலுங்கானாவை தனி மாநிலமாக அறிவி்க்கக் கோரி அங்கு போராட்டம் வெடித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ரயில் மறியல் நடக்கிறது. இதனால் தெலுங்கானா வழியாக போகும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் வேறு பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன.
இன்று காலை சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு புறப்பட்ட ரயில் ரேணிகுண்டா, வாடி, தான்ட், பெராவன் வழியாக திருப்பிவிடப்பட்டது.
நிஜாமுதீன்- கோவை எக்ஸ்பிரஸ், நிஜாமுதீன்- சென்னை எக்ஸ்பிரஸ், சென்னை- புதுடெல்லி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் இதே மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
ஹைதராபாத்- சென்னை எக்ஸ்பிரஸ் (எண் 12604) ஹைதராபாத்தில் இருந்து இன்று மாலை 4.55 மணிக்கு புறப்படுகிறது. இதே போன்று ஹைதராபாத்- சென்னை எக்ஸ்பிரஸ் (எண் 12706) ஹைதராபாத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு புறப்படுகிறது.
காசிகூடாவில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று மாலை 4 மணிக்கு புறப்படுகிறது.
தெலுங்கானா ரயில் மறியலால் இன்று ஆந்திராவில் 116 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 14 எக்ஸ்பிரஸ் ரயல்கள் பகலில் ரத்து செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications