சாதியும், மதமும் நாட்டின் வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கிறது: சிபிஎம் வருத்தம்
பரமக்குடி: நமது நாட்டின் வளர்ச்சிக்கு சாதியும், மதமும் குறுக்கே நிற்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே. ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பரமக்குடி அரசு கலைக் கல்லூரிக்கு ரூ. 10 லட்சம் வழங்கினார். அந்த நிதியை வைத்து கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை அவர் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
கடந்த மூன்றாண்டு காலத்தில் எனக்கு வழங்கப்படும் நிதியில் இருந்து 80 சதவீதத்தை கல்லூரி மற்றும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக வழங்கி வருகிறேன்.
இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு கல்வி மிகவும் முக்கியமானதாகும். இராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சமூகப் பதற்றத்தை போக்க கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் பரிந்துரை செய்தார். ஆனால் இளைஞர்களின் வேலை வாய்ப்புக்காக துவக்கப்பட்ட சேதுசமுத்திர திட்டப் பணிகள் இராமர் பாலம் என்ற பெயரால் மத ரீதியாக பாதியிலேயே முடக்கப்பட்டு பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு சாதியும், மதமும் குறுக்கே நிற்கிறது. வரலாறு, தத்துவம் படித்த பட்டதாரிகளுக்கு வேலை இல்லை.
மேலும் இராமநாதபுரம் மாவட்ட மாணவ-மாணவிகள் வாய்ப்பு கிடைத்தால் விளையாட்டு வீரர்களாக, விஞ்ஞானிகளாக வரமுடியும். ஆனால் சாதி குறுக்கே நிற்கிறது.
எங்கள் காலத்தில் எதையும் எதிர்பாராத கல்வி கொடையாளர்கள் பள்ளி, கல்லூரிகளை உருவாக்கினர். ஆனால் இன்று மருத்துவ படிப்புக்காக ரூ. 40 லட்சம் கட்டி சீட்டு வாங்கும் நிலை உள்ளது.
பிரிட்டனில் பொதுப் பள்ளியில் கல்வி கற்கிறார்கள். ஆனால் இந்தியாவில் அரசுக் கல்லூரி மற்றும் பள்ளிகளில் பணியாற்றுவோர் கூட தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும்," என்றார்.
-
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications