வெடிகுண்டுகள், கைத்துப்பாக்கியுடன் அகமதாபாத்தில் ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil

கைதான நபரிடமிருந்து 10 வெடிகுண்டுகளும், ஒரு ரிவால்வரும் பறிமதுல் செய்யப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள நபரின் பெயர் சஷாத் அகமது என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டுகள் எட்டு குண்டுகள் இதுவரை செயலிழக்க செய்யப்பட்டுள்ளன.
சஷாத்தின் வீட்டில் நடந்த சோதனைக்குப் பின்னர் இந்த வெடிகுண்டுகள், ரிவால்வர் பறிமுதல் செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாக அகமதாபாத் போலீஸ் கமிஷனர் எஸ்.கே.சின்ஹா கூறினார்.
ரத யாத்திரை அல்லது மோதல்களின்போது இந்த வெடிகுண்டுகளை சஷாத் பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
உண்மையில் சஷாத் வெடிகுண்டுகளுடன் இருப்பதாக அவரது மனைவிதான் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்தே போலீஸார் விரைந்து சென்று சோதனை நடத்தியதாகவும் கமிஷனர் சின்ஹா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications