நி்த்தியானந்தா தமிழகத்திற்குள் நுழையக் கூடாது-பா.பா. பிளாக் எச்சரிக்கை
மதுரை: தன் மீதான வழக்குகளில் தான் குற்றமற்றவர் என்று நித்தியானந்தா முதலில் நிரூபிக்க வேண்டும். அதுவரை அவரை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம். மீறி நுழைந்தால் போராட்டம் நடத்துவோம் என பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் முருகன்ஜி பேசுகையில், நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ஒரு நடிகையுடன் உல்லாசமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளிலிருந்து முதலில் அவர் வெளியே வர வேண்டும். தான் குற்றமற்றவர் என்பதை அவர் முதலில் நிரூபிக்க வேண்டும்.
அதுவரை அவர் தமிழகத்தில் தியானம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது. அவருக்குத் தடை விதிக்கப்பட வேண்டும்.
மீறி நித்தியானந்தா எந்த நிகழ்ச்சியையாவது நடத்த முயன்றால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தார் முருகன்ஜி.












Click it and Unblock the Notifications