சமச்சீர் கல்வி திட்ட தீர்ப்பு யாருக்கும் வெற்றி, தோல்வியல்ல-கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு, யாருக்கும் வெற்றி தோல்வி அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள தீர்ப்பு குறித்து கருணாநிதி கருத்து தெரிவிக்கையில்,
இதை யாருக்கும் வெற்றி என்றோ, தோல்வி என்றோ எடுத்துக் கொள்ளக் கூடாது.
உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்ட பின்னரே சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏழை, நடுத்தர மாணவ, மாணவியர்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாக அரசு கருத வேண்டும்.
இந்தத் தீர்ப்பு எதிர்கால சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலாக கருதப்பட வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications