3 போலீஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: 3 போலீஸ் உயர் அதிகாரிகளை திடீர் என்று மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சேலம் சரக டி.ஐ.ஜி. ஜி.வெங்கட்ராமன், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையிட துணை போலீஸ் கமிஷனர் ஆசியாம்மாள், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு தென் மண்டல போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு (சி.ஐ.டி) சூப்பிரண்டாக இருந்து வந்த சி.மகேஸ்வரி, கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் தென்மண்டல போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications