காதில் பூ வைத்துக் கொண்டு கலெக்டரிடம் மனு
நெல்லை: தென்காசி அருகே குடிநீர் இணைப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காதில் பூ வைத்துக் கொண்டு திருநெல்வேலி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தென்காசி அருகே உள்ள பட்டாகுறிச்சி பஞ்சாயத்தில் அரசு நிர்ணயித்த குடிநீர் இணைப்பு கட்டணமான ஆயிரம் ரூபாயை விட கூடுதலாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதை கண்டித்து அப்பகுதி பொதுமக்களுடன் சேர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் காதில் பூக்களை வைத்து கொண்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பட்டாக்குறிச்சி சுகாதார வளாகத்தை சிலர் ஆக்கிரமித்துள்ளதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனுக்கள் கொடுத்தும் பலனில்லை என்றும் அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.
பஞ்சாயத்து நிர்வாகத்தின் மெத்தன போக்கை கண்டிக்கும் வகையில் காதில் பூ வைத்து மனு கொடுத்ததாக மக்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications