உயிரை விடவும் தயார்: பிரதமருக்கு ஹசாரே எச்சரிக்கை கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் உயிரையும் விடவும் தயாராக இருப்பதாக பிரதமருக்கு மன்மோகன் சிங்குக்கு சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே கடிதம் எழுதியுள்ளார்.

ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவை உருவாக்கும் பணியில், 5 மத்திய அமைச்சர்களும், அன்னா ஹசாரே உள்ளிட்ட 5 சமூக பிரதிநிதிகளும் அடங்கிய கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் இவர்களுக்குள் ஒருமித்த கருத்து உருவாகாததால், இருதரப்பினரும் தனித்தனி வரைவு மசோதாக்களை உருவாக்கினர்.

இவற்றில் எந்த மசோதாவை ஏற்பது என்று நாடாளுமன்றம் முடிவு செய்யும்.

ஆனால், ஆகஸ்டு 16ம் தேதிக்குள் வலிமையான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாவிட்டால், மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டடத்தை துவக்குவேன் என்று ஹசாரே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து இந்த உண்ணாவிரதத்தையும் ராம்தேவ் உண்ணாவிரதத்தை முறியடித்தது மாதிரி முறியடிப்போம் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், மத்திய அரசு தயாரித்துள்ள லோக்பால் மசோதா பலவீனமாக உள்ளது, கேலிக்கூத்தானதாக உள்ளது. அந்த மசோதாவின் பார்வை, ஒரு வரையறைக்குள் உள்ளது.

சாதாரண மக்கள் சந்திக்கும் ஊழல் பிரச்சனைகளுக்கு இந்த மசோதா தீர்வு காணாது. ஆகவே, இந்த மசோதாவில் உள்ள நிறைய ஓட்டைகளை மன்மோகன் சிங் நீக்க வேண்டும்.

அதே சமயத்தில், நாங்கள் தயாரித்துள்ள ஜனலோக்பால் மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நான் ஆகஸ்டு 16ம் தேதியில் இருந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து நிருபர்களிடம் ஹசாரே கூறுகையில், மத்திய அமைச்சர் கபில் சிபல் வெற்றி பெற்ற சாந்தினி சவுக் தொகுதி மக்களிடம் வரும் 21ம் தேதி முதல் 24ம் தேதிவரை எங்கள் இயக்கத்தினர் வாக்கெடுப்பு நடத்துவார்கள். அதில் 8 கேள்விகள் இருக்கும்.

இருவிதமான லோக்பால் வரைவு மசோதாக்கள் பற்றியும், லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரை கொண்டு வரலாமா என்பது பற்றியும் இந்த சர்வே நடத்தப்படும்.

அந்த கேள்விகளுக்கு 2 நாட்கள் கழித்து பதில்களை பெற்றுக் கொள்வோம். 27ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்

எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையாகும். பாபா ராம்தேவின் போராட்டத்தை நசுக்கியதுபோல எங்களுடைய போராட்டத்தையும் ஒடுக்குவோம் என்று கூறுவது சரியல்ல.

எங்களைக் கைது செய்தாலும், அடித்துத் துன்புறுத்தினாலும் கவலையில்லை. அவற்றை நாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எங்கள் உயிரையும் நாங்கள் தியாகம் செய்யத் தயாராகி விட்டோம். ஊழலால் நாம் பட்ட துன்பம் போதும் என்றார்.

இது குறித்து லோக்பால் மசோதா வரைவுக்குழுவில் இடம்பெற்றுள்ள பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறுகையில், எங்களுடைய அறப்போராட்டம் பற்றி டெல்லி போலீஸாருக்கு ஏற்கெனவே விவரங்களை அளித்துவிட்டோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+