நண்பர்களை காண பாளையங்கோட்டை சிறை சென்ற மத்திய அமைச்சர் மு.க. அழகிரி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வேங்கடசாமி சமுத்திரத்தை சிவனாண்டி என்பவருக்கு சொந்தமான 5.14 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக கூறி, திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் என்ற சுரேஷ்பாபு, கொடி.சந்திரசேகரன், சேதுராமன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து பாளையங்கேட்டை சிறையில் அடைத்தனர்.
இதில் கோ.தளபதி, சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ் ஆகியோர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டவர்கள் என்பதால்,இவர்களை காண பாளையங்கோட்டை சிறைக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று காலை வந்தார்.இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் பெரியசாமி,மைதீன்கான்,மதுரை துணை மேயர் மன்னன், தேனி மாவட்ட திமுக செயலாளர் மூக்கையா, திருநெல்வேலி திமுக மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோரும் உடன் சென்றனர்.












Click it and Unblock the Notifications