சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: 8 காங். தொண்டர்கள் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் 8 காங்கிரஸ் தொண்டர்கள் பலியாகியுள்ளனர்.
ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள அரமோராவில் நேற்று விவசாயிகள் பேரணி நடந்தது. இதில் கலந்து கொள்ள ராய்ப்பூரில் இருந்து சத்தீஸ்கர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நந்த் குமார் பட்டேல் தலைமையில் ஏராளமான காங்கிரசார் 25 வாகனங்களில் அரமோரா சென்றனர்.
பேரணியை முடித்துக் கொண்டு அவர்கள் இந்தகான் மற்றும் உதாந்தி இடையே சென்றபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் கண்ணி வெடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் நேற்று மாலை 6 மணி அளவில் நடந்தது. மாவோயிஸ்ட்கள் நந்த் குமார் பட்டேலின் காரை குறிவைத்தனர் ஆனால் அவர் தப்பிவிட்டார்.
இந்த தாக்குதலில் 8 காங்கிரஸ் தொண்டர்கள் பலியாகினர்.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த காங்கிரஸ் தொண்டர் நீரஜ் சிங் தாகூர் கூறியதாவது,
நக்சலைட்டுகள் கண்ணி வெடிகளை வெடிக்கச் செய்தனர். பின்னர் அங்கு ஒளிந்திருந்த அவர்கள் திடீர் என்று வெளிப்பட்டு எங்கள் மீது தூப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றார்.
இந்த தாக்குதலில் தப்பிய காங்கிரஸ் தலைவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் ராயப்பூர் சென்றனர்.












Click it and Unblock the Notifications