ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியதாக அதிமுக எம்.எல்.ஏ. மீது விவசாயி புகார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஆண்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வம் தன்னிடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூடலூர் விவசாயி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நில மோசடி, மிரட்டி பணம் பறித்தல், நில அபகரி்ப்பு போன்றவை பற்றி புகார் கொடுக்கவே பயந்த மக்கள் தற்போது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பார்த்து துணிச்சலுடன் புகார் கொடுக்கின்றனர்.

இதையடுத்து ஏராளமான நில மோசடி புகார்கள் குவிந்துள்ளன. இந்நிலையில் ஆண்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வம் தன்னிடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூடலூர் விவசாயி மணி புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் பணம் கொடுக்காததால் எந்தவித அறிவிப்பும் இன்றி தனது 4.5 ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழை மரங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தங்க தமிழ்ச்செல்வம் மீது போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளார்.

ஆனால் மணி பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் விவசாயம் செய்ததால் தான் வாழை மரங்கள் அகற்றப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+