எம்.பிக்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம்- அமர்சிங்கிடம் டெல்லி போலீஸ் விசாரணை

கடந்த 2008ம் ஆண்டு, ஜூலை 22ம் தேதி லோக்சபாவில் நம்பிக்கை வாக்கு கோரினார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பு தங்களுக்கு லஞ்சம் தர முயற்சி நடந்ததாக கூறி பாஜகவைச் சேர்ந்த எம்.பிக்கள் பணக் கட்டுக்களை சபாநாயகர் இருக்கை முன்பு கொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. ஆனால் ஆமையை விட படு நிதானமாக இந்த வழக்கின் வேகம் இருந்தது. இதைக் கடுமையாக கண்டித்த உச்சநீதிமன்றம், டெல்லி காவல்துறையை ஒரு பிடி பிடித்தது.
இதையடுத்து திடீரென சுறுசுறுப்பான டெல்லி காவல்துறை, அமர்சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்ஸேனா மற்றும் சுஹைல் இந்துஸ்தானி ஆகியோரை கைது செய்தது.
அவர்கள் போலீஸ் விசாரணையின்போது அமர்சிங்தான் தங்களுக்குப் பணம் கொடுத்ததாக புட்டுப் புட்டு வைத்தனர்.
இதையடுத்து அமர்சிங்கிடம் விசாரணை நடத்தவும் தீர்மானித்த காவல்துறை, உள்துறை அமைச்சகத்திடம் அனுமதியும் கோரியது. இதற்கான அனுமதி கிடைத்ததும், இன்று அவரை விசாரணைக்கு அழைத்தது டெல்லி காவல்துறை.
இதையடுத்து இன்று டெல்லி குற்றப் பிரிவு காவல்துறை அலுவலகத்திற்கு வந்தார் அமர்சிங். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அமர் சிங் முன்பு, சுஹைல் இந்துஸ்தானி மற்றும் சக்ஸேனா இருவரையும் நேரில் வைத்து விசாரணை நடத்தவும் டெல்லி போலீஸார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அமர்சிங்கிடம் கேட்பதற்காக 12 கேள்விகளையும் டெல்லி போலீஸார் தயாரித்து வைத்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications