ஜவுளி மீதான 5 சதவீத வரி உயர்வு ரத்து - ஜெயலலிதா
சென்னை: ஜவுளித் தொழில் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, துணி மற்றும் துணிப் பொருட்கள் மீதான 5 சதவீத வரி உயர்வு ரத்து செய்யப்படுகிறது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
முந்தைய தி.மு.க. அரசு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேலான கடன் சுமையை எனது தலைமையிலான அரசு மீது சுமத்தி விட்டு சென்ற நிலையிலும், மக்கள் நலனுக்காக பல புதிய நலத் திட்டங்களை எனது அரசு கொண்டு வந்துள்ள நிலையிலும், ஏழை, எளிய மற்றும் சாமானிய மக்களை பாதிக்காத வகையில், தமிழக அரசால் விதிக்கப்படும் மதிப்புக்கூட்டு வரி கடந்த 12-ந் தேதி முதல் சிறிதளவு உயர்த்தப்பட்டது.
தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம், 2006-ல் அட்டவணை 4, பகுதி ஏ, வரிசை எண். 3 முதல் 10 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள துணி மற்றும் துணிப்பொருட்கள் மீது 5 சதவீதம் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தேவைக்குறைவு காரணமாக ஜவுளி ஏற்றுமதியில் நிலவும் மந்தமான நிலையால் துணிகள் மற்றும் இழைகள் அதிக அளவில் தேக்கமடைந்து உள்ளதாகவும், இதன் காரணமாக ஜவுளித்துறை பெரும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது என்றும், இத்தருணத்தில் மதிப்புக்கூட்டு வரி விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்ற மாநில உற்பத்தியாளர்களுடன் போட்டியிட இயலாது என்றும், எனவே, துணி மற்றும் துணிப்பொருட்கள் மீது விதிக்கப்பட்ட 5 சதவீத மதிப்புக்கூட்டு வரியை விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் ஜவுளித்தொழிலில் ஈடுபட்டு வருபவர்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. தற்போது ஜவுளித்தொழில் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, இதுபற்றி இன்று (நேற்று) எனது தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
5 சதவீத வரி உயர்வு ரத்து
தமிழ்நாடு மதிப்புக்கூட்டு வரிச் சட்டம், 2006-ல் அட்டவணை 4, பகுதி ஏ, வரிசை எண். 3 முதல் 10 வரையில் குறிப்பிடப்பட்டுள்ள துணி மற்றும் துணிப்பொருட்கள் மீதான 5 சதவீத மதிப்புக்கூட்டு வரியை 12-ந் தேதி முதல் முன்தேதியிட்டு திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று எனது தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவால் துணி மற்றும் துணிப்பொருட்கள் வரி விதிப்பிலிருந்து விலக்கு பெற்ற இனங்களாக விளங்கும். இதன்மூலம் தமிழ்நாட்டின் ஜவுளித்தொழிலுக்கு நிவாரணம் கிடைப்பதுடன், இந்த தொழில் பெருகவும் வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.
-இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications