உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு: மத்தியமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உள்ளாட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு தான் உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த மத்தியமைசச்ரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது,
உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தான் உள்ளது. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அல்லது மாநகராட்சி ஆகிய 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இதன்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கபப்டும் தலைவர், உறுப்பினர் ஆகிய பதவிகளில் இனி பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கப்படும்.
இந்த இட ஒதுக்கீடு எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கும் பொருந்தும். இந்த 50 சதவீத ஒதுக்கீட்டில் பெண்கள் மட்டும் தான் போட்டியிட முடியும். இந்த ஒதுக்கீட்டை உறுதி செய்ய 110-வது அரசியல் சட்டத் திருத்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்படும்.
இதனால் இனி பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு அதிக பதவி கிடைக்கும் என்றார்.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது 28 லட்சத்து 18 ஆயிரம் பிரதிநிதிகள் உள்ளனர். இதில் சுமார் 10 லட்சம் பேர் பெண்கள். இந்த புதிய ஒதுக்கீட்டால் இந்த எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டும்.
இந்த ஒதுக்கீட்டுக்கான மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தம் வரும் 1-ம் தேதி கூடும் நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் தமிழகத்தில் அது அமலுக்கு வரும். எனவே, தமிழகத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications