பண மோசடி: மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் உதவியாளர் காமராஜ் கைது
விழுப்புரம்: மருத்துவக் கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி செய்த மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் உதவியாளர் காமராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவர் கொடுத்துள்ள புகாரில், "வண்டலூரில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்துக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரி உள்ளது.
இந்த கல்லூரியில் இடம் வாங்கித் தருவதாகக் கூறிய மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் உதவியாளர் காமராஜ் என்பவரிடமும் மற்றும் சிலரிடமும் கடந்த 2010-ம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் ரூ. 12 லட்சம் கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் கூறியபடி சீட் வாங்கித் தரவில்லை. வாங்கிய பணத்தையும் ஒரு ஆண்டுக்கு மேலாகியும் திருப்பித் தரவில்லை. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி காமராஜ் (49) மற்றும் அவரது கூட்டாளி கர்னல் (45) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் காமராஜ் சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications