குன்னூரிக்கு பதில் மைசூரில் பயிற்சி பெறும் இலங்கை ராணுவம்: இந்து மக்கள் கட்சி போராட்டம்
ஊட்டி: தமிழ் உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் 25 இலங்கை ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு இனி மைசூரில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சிக் கழகத்தில் இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த 25 பேருக்கு இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அளிக்கப்போவதாக செய்திகள் வந்தன. இதற்கு தமிழகத்தி்ல உள்ள பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தின.
இந்நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு குன்னூரில் பயிற்சி தொடங்கியது. இலங்கையில் நடந்த இறுதி கட்டப்போரில் லட்சக் கணக்கான தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டு ராணுவத்தினருக்கு இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் பயிற்சி அளிப்பதா என்று சீமானின் நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின.
இதையடுத்து குன்னூருக்கு பதிலாக மைசூரி்ல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய மண்ணில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று தெரிவி்த்துள்ளது. தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க தந்தி அனுப்பும் போராட்டம் நடத்தப்போவதாக அது அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications