2ஜி ஊழல்: நாளை முதல் தானே வாதாடுகிறார் ஆ.ராசா

சட்டப்படிப்பில் முதுநிலை பட்டம் பெற்ற அவர் தனது சார்பில் தானே வாதாடவுள்ளார்.
இந்த வழக்கில் ராசா உள்பட 14 பேர் கைதாகி திகார் சிறையில் உள்ளனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
இதில் சிபிஐ தரப்பு வாதம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. சிபிஐ வழக்கறிஞர் யு.யு. லலித் நேற்று வாதாடுகையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவருமே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று கூறி தனது வாதத்தை முடித்தார்.
இதையடுத்து நாளை முதல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம் தொடங்கவுள்ளது.
அப்போது ராசா தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து வாதாட உள்ளார். தனக்காக வாதாட அவர் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளவில்லை. சட்டப்படிப்பில் முதுநிலை பட்டம் பெற்ற அவர் தனது சார்பில் தானே வாதாடவுள்ளார்.
ராசா மீது சிபிஐ மோசடி, கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இதை எதிர்த்து ராசாவே வாதாட இருப்பதால், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications