ஏழை இந்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை கோரி பாஜக போராட்டம்
நாகர்கோவில்: ஏழை இந்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க கோரி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுபான்மை குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது போல், ஏழை இந்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, பாஜக இளைஞர் அணி சார்பில் கடந்த 21ம் தேதி முதல் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது மக்களிடம் பெற்ற கையெழுத்துகள், அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்படும்.
அப்படியும் எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்து இளைஞர் அணி சார்பில் போராட்டம் நடைபெறும்.
இந்திய தமிழ் மீனவர்களை பாதுகாக்க தவறிய, மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசை கண்டித்தும், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொண்டு இருக்கும் இலங்கை அரசை கண்டித்தும், மீனவர்களை பாதுகாக்க கோரியும், தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் ராமேஸ்வரத்தில் வருகிற ஆகஸ்டு 7ம் தேதி கடல் முற்றுகை போராட்டம் நடக்கிறது.
இதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், அகில இந்திய தலைவர்கள் முரளிதரராவ், சதீஷ் ஆகியோர் கலந்து கொள்வதாக கூறியுள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் 1,000 பேர் கலந்து கொள்கிறார்கள். இதே போல் மாநிலம் முழுவதும் இருந்து கடல்
முற்றுகை போராட்டத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications